sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு

/

சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு

சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு

சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு


ADDED : செப் 14, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியில் சாலைப் பணியை தடுத்ததாக வனத்துறை அதிகாரிகள் மீது ஒப்பந்தகாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவச்சியை சேர்ந்த கந்தசாமி, இவர் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் இலுப்பக்குடியில் இருந்து கருங்காலக்குடி வரை தார்சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்று வேலை செய்து வருகிறேன். நேற்று மதியம் 12:00 மணிக்கு வனத்துறை அதிகாரிகள் டிரைவரை தாக்கி இயந்திரத்தை எடுத்து சென்றதாகவும், டிரைவரை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு வழங்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

சூரக்குளம் ஊராட்சி தலைவர் மலைச்சாமி கூறுகையில், சாலை அமைக்க கடந்த 20 நாட்களாக பணி நடக்கிறது. வனத்துறை நேற்று தடுத்ததில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது., என்றார்.

மாவட்ட வன அலுவலர் பிரபா கூறுகையில், வனத்துறை இடத்திற்குள் சாலை செல்கிறது. வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் சாலை பணியை செய்து வருகின்றனர். அவற்றை தடுப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். ஊழியர்கள் மீது பொய்யாக புகார் அளித்துள்ளார் என்றார்.






      Dinamalar
      Follow us