
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே வேலாங்குளம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் வேலுார் வேளாங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.