/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' இணைப்பு
/
ஊராட்சிகளில் தாமதமாகும் 'பாரத் நெட்' இணைப்பு
ADDED : ஏப் 26, 2024 12:49 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு பாரத் நெட் திட்டத்தில் கேபிள் வந்தும், இன்டர்நெட் இணைப்பு கொடுக்க தாமதமாவதால் ஊராட்சி பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக மக்கள் பெற வசதியாக பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை கம்பி வடமான 'ஆப்டிகல் பைபர்' மூலம் இணைத்து இணையதளம் வழியாக அரசின் சேவைகள் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் வாயிலாக அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு ஜி.பி., அளவிலான அலைக்கற்றை வழங்கப்படும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவை அளிக்கப்படும். சிங்கம்புணரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இத்திட்டத்தில் கேபிள் கொண்டு செல்லப்பட்டு ஒரு வருடமாகியும் இதுவரை இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் இன்டர்நெட் வசதிகளைப் பெற ஊராட்சி நிர்வாகத்தினர் சிரமப்படுகின்றனர். ஊராட்சி செயலர்கள் தங்கள் சொந்த அலைபேசியில் இருந்து இன்டர்நெட் இணைப்பை பெற்று பணிகளை மேற்கொள்கின்றனர். டவர் வசதி இல்லாத ஊராட்சிகளில் இப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளுக்கும் உடனடியாக பாரத் நெட் இணைப்பை கொடுக்க வேண்டும்.

