/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
/
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
ADDED : ஜூன் 27, 2024 11:46 PM

திருப்புவனம் : மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.
9 காணிக்கை, ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணம், நகை உள்ளிட்டவை எண்ணப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவராம்குமார், துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர் ஞானசேகரன், தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 9 உண்டியல்களில் 44 லட்சத்து 17 ஆயிரத்து 444 ரூபாயும், 379 கிராம் தங்கமும், 361 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 80 ஆயிரத்து 415 ரூபாயும் காணிக்கையாக கிடைத்தது. கண்காணிப்பு பணியில் ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஈடுபட்டிருந்தனர்.

