ADDED : ஆக 31, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.
காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ராஜ்குமார், பேராசிரியர்கள் ஜெயபிரகாஷ் கவிதா என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் தனசேகர பாண்டியன், கோகிலா தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் கவியரசு, ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.