/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
ADDED : செப் 05, 2024 04:55 AM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த அனுபவராஜ் மனைவி தேவி 30. இவர் தற்போது கல்லலில் வசித்து வருகிறார். இவருக்கு ஆ.கருங்குளம் அருகே உசிலங்குளத்தில் வீடு உள்ளது. இந்த வீட்டில் மாமியார் வசித்து வருகிறார்.
மாமியார் ஆக.28 சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். செப்.2ஆம் தேதி உசிலங்குளத்தில் உள்ள வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைந்து கதவு திறந்து கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் தேவிக்கு தெரிவித்துள்ளனர்.தேவி தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.
தேவி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். ஆக.30ஆம் தேதி இரவு இதே ஊரில் கோயிலில் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் திருடுபோய் உள்ளது.