sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஏரியூரில் மாட்டு வண்டி பந்தயம்

/

ஏரியூரில் மாட்டு வண்டி பந்தயம்

ஏரியூரில் மாட்டு வண்டி பந்தயம்

ஏரியூரில் மாட்டு வண்டி பந்தயம்


ADDED : மார் 25, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலையில் உள்ள, சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மலைமருந்தீஸ்வரர், முனிநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 15 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மார்ச் 22ல் மலைமருந்தீஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மார்ச் 23 ல் பால்குட ஊர்வலம், காவடி எடுப்பு நடந்தது. பக்தர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாளுடன் மலைமருந்தீஸ்வரரும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர், சண்டீகேஸ்வர் தனித்தனி சப் பரத்தில் எழுந்தருளினர். தேர் ரத வீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. பிறகு மீண்டும் தடம் பார்க்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இரண்டு பிரிவாக நடைபெற்ற பந்தயத்தில் 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us