sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்கள் செல்ல உத்தரவு

/

மானாமதுரை பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்கள் செல்ல உத்தரவு

மானாமதுரை பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்கள் செல்ல உத்தரவு

மானாமதுரை பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்கள் செல்ல உத்தரவு


ADDED : ஜூன் 11, 2024 07:28 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, ராமேஸ்வரம்,விருதுநகர்,செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

இந்தவழியாக செல்லும் பஸ்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்டிற்குள் வராமல் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் விபத்துஅபாயத்தில் பயணிகள் தவிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர்விடுத்துள்ள அறிக்கையில், மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் மானாமதுரை வழியாக செல்லும்பஸ்கள் அனைத்தும் இரவு நேரங்களிலும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us