/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஆனந்தவல்லி கோயிலில் நாளை தேரோட்டம்
/
மானாமதுரை ஆனந்தவல்லி கோயிலில் நாளை தேரோட்டம்
ADDED : ஏப் 21, 2024 04:20 AM

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று சமணர்கள் கழுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம்தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோம நாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் 6ம் நாளான நேற்று கீழமேல்குடி கிராமத்தார்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர்.
பின்னர் சுவாமிகள் இரட்டை சப்பரங்களில் வீதி உலா சென்று கழுவேற்றும் பொட்டலில் சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம் இன்று ஏப்.21ம் தேதி காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், நாளை ஏப்.22ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.

