sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆக.29ல் சதுர்த்தி விழா கொடியேற்றம் செப்.,6 தேரோட்டம் செப்.,7 மோதக படையல்

/

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆக.29ல் சதுர்த்தி விழா கொடியேற்றம் செப்.,6 தேரோட்டம் செப்.,7 மோதக படையல்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆக.29ல் சதுர்த்தி விழா கொடியேற்றம் செப்.,6 தேரோட்டம் செப்.,7 மோதக படையல்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ஆக.29ல் சதுர்த்தி விழா கொடியேற்றம் செப்.,6 தேரோட்டம் செப்.,7 மோதக படையல்


ADDED : ஆக 17, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

குைடவரை கோயில் என்ற சிறப்பு பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆக., 29 காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்குகிறது. இரவு 8:30 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருவார்.

சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆக., 30 முதல் செப்., 5 வரை தினமும் காலையில் வெள்ளி கேடகத்தில் விநாயகர் வீதி உலா வருவார். ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு விநாயகர் சிம்ம, பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். செப்.,3 மாலை 4:00 மணிக்கு கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு ஒன்பதாம் திருநாளான செப்., 6 காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு சதுர்த்தி விழா தேரோட்டம் நடைபெறும்.

மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை மூலஸ்தானத்தில் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

விழாவின் பத்தாம் நாளான விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகருக்கு காலையில் இருந்து சிறப்பு அபிேஷக ஆராதனை, முக்குறுணி மோதக படையல், தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறும். திருவிழா காலங்களில் கோயிலில் திருமுறை பாராயணம், மாலையில் நாதஸ்வர கச்சேரி, கலைநிகழ்ச்சி, மெல்லிசை, பரதநாட்டியம் நடைபெறும். பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us