/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
ADDED : செப் 11, 2024 06:09 AM

சிவகங்கை : முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டியை சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி மாவட்ட அளவில் நேற்று முதல் செப்., 16 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து மண்டல அளவிலும், இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிகள் அக்., வரை நடைபெறும். சிவகங்கை மாவட்ட விளையாட்டு திடலில் மாவட்ட அளவிலான கையுந்துபந்து, இறகுபந்து போட்டியை அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். மேலும், மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
சிவகங்கையில் ஆய்வு கூட்டம்
பின்னர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை சார்ந்த வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் உதயநிதி, பெரியகருப்பன் முன்னிலை வகித்தனர். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சிறப்பு செயலாக்க திட்ட செயலர் தாரேஷ் அகமது, எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி பங்கேற்றனர்.
கூட்டத்தில் அரசின் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு தலைவர் திருநாவுக்கரசு, காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை, கலைஞர் தமிழ் சங்க செயலர் பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுப.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.