ADDED : மே 30, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோடாங்கி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரூபன் சக்கரவர்த்தி . இவர் சிவகங்கையில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவரும் பிளஸ் 2 மாணவியும் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். சிறுமி உடல்நிலை சரியில்லாமல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மருத்துவமனை நிர்வாகம் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகாரின் பேரில் சிவகங்கை மகளிர் போலீசார் ரூபன் சக்கரவர்த்தியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.