/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் மாணவிகள் விடுதி கட்டுமான பணி
/
சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் மாணவிகள் விடுதி கட்டுமான பணி
சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் மாணவிகள் விடுதி கட்டுமான பணி
சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் மாணவிகள் விடுதி கட்டுமான பணி
ADDED : பிப் 27, 2025 01:03 AM

சிவகங்கை; சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணி அதிகாரிகள் கண்காணிப்பின்றி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான விடுதி திருப்புத்துார் ரோட்டில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே செயல்பட்டு வந்தது. 35 ஆண்டுக்கு மேல் கட்டப்பட்ட கட்டடமாக இருந்ததால், உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டு, மாணவர்கள் தங்குவதற்கே அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக விடுதி மாணவர்கள் வேறு கட்டடத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் சிதிலமடைந்த கட்டடத்தை அகற்றி புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
ரூ.9.32 கோடியில் விடுதி
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டடத்தை அகற்றி, அந்த இடத்தில் புதிதாக ரூ.9.32 கோடியில் அரசு கல்லுாரி மாணவிகளுக்கான விடுதி கட்டும் பணியை துவக்கியுள்ளனர். இந்த விடுதி கட்டடம் தரைத்தளம் மற்றும் 3 மாடி கட்டடத்துடன் அமைய உள்ளது. இதில், கல்லுாரி மாணவிகள் ஒரே நேரத்தில் 150 பேர் வரை தங்குவதற்கான வசதிகளை செய்ய உள்ளனர். தற்போது இந்த பணிக்கு பீம்' போடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆரம்ப கட்ட பணிகளை கூட கண்காணிக்க உரிய அதிகாரிகள் இல்லை. அதேபோன்று விடுதிக்கான நிதி ஒதுக்கீடு, எத்தனை மாடி கட்டடம், வேறு எவ்விதமான வசதி விடுதியில் செய்யப்படும் என்பது போன்ற விபரங்கள் அடங்கிய விளம்பர பலகை வைக்கவில்லை. பொறியாளர்கள் முன்னிலையில் கட்டுமான பணி நடக்காமல், கம்பி கட்டுபவர்கள், கொத்தனார்கள் தலைமையில் கட்டுமான பணி நடக்கிறது.

