ADDED : ஆக 29, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
3 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 35 ஜோடி மாடுகளும், ஒரு பிரிவாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 16 குதிரை வண்டிகளும் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.