sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரோட்டில் கூட்டமாக மாடுகள் உலா

/

ரோட்டில் கூட்டமாக மாடுகள் உலா

ரோட்டில் கூட்டமாக மாடுகள் உலா

ரோட்டில் கூட்டமாக மாடுகள் உலா


ADDED : ஜூன் 11, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விபத்தும் தொடர்கதையாகி வருகிறது.

காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காரைக்குடி நகராட்சி ரோடுகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது.

வளர்க்கப்படும் மாடுகள் வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலையில் அவிழ்த்து விடப்படுகிறது. இதனால், மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரில் திரிவதோடு இரவு நேரங்களில் சாலைகளில் அமர்ந்து கொள்கிறது. சாலைகளில் மாடுகள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் தவிர மாடுகளும் காயமடைகிறது.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் மாடு வளர்ப்போரின் எண்ணிக்கையும் மாடுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாடுகள் சாலையில் சுற்றி திரிவதை தடுத்து விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us