ADDED : பிப் 13, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழா நடைபெற்றது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதல்வர் மனோஜ் குமார் சர்மா முன்னிலை வகித்தார். சிவகங்கை தேசிய தகவல் மைய அலுவலர் ராஜகுரு, முதுநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விழிப்புணர்வு அடங்கிய டி-சர்ட்'களை வழங்கினார்.