sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு

/

திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு

திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு

திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு


ADDED : மார் 31, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 31, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறையை பக்தர்கள் கோரியுள்ளனர்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவாக பூச்சொரிதல் விழா, வசந்தப்பெருவிழா நடைபெறும். பூச்சொரிதல் விழா ஏப்.,28 ல் நடைபெறும்.

தொடர்ந்து மறுநாள் காலை காப்பு கட்டி வசந்தப்பெருவிழா துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் கோயில் வெளி வளாகத்தில் விநாயகர் கோயில் அருகில் அறநிலையத்துறை சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

பணிகள் முடிவடையாமல் வளாகம் முழுவதும், மணல்,கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பக்தர்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளது. விழா துவங்கும் முன் ஏற்பாடுகளுக்கு சிரமத்தை தரும். எனவே கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us