sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு

/

திருப்புவனத்தில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு

திருப்புவனத்தில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு

திருப்புவனத்தில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு


ADDED : ஏப் 29, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள், பக்தர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

திருப்புவனம் நகரை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் வாரம்தோறும் நடைபெறும் சந்தைக்கு தங்கள் நிலங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். கிராம மக்கள் பலரும் திருப்புவனத்தில் இருந்து தான் மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வெளியூர் பயணிகள் வந்து செல்லும் திருப்புவனத்தில் குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் வெளியூர்வாசிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வைகை ஆற்றிற்கு செல்ல வேண்டியுள்ளது. அதிலும் பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மார்கெட் வீதியில் இருந்த கழிப்பறையும் பழுதடைந்துள்ளதால், திருப்புவனத்திற்கு வரவே வெளியூர்வாசிகள் அஞ்சுகின்றனர். மாவட்டத்திலேயே அதிகளவு வருவாய் ஈட்டும் பேரூராட்சியாக திகழ்ந்தாலும் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து தி.பழையூர் ராஜேந்திரன் கூறியதாவது: தினசரி வெளியூர் பயணிகள் அடிப்படை வசதிகளுக்கு தவித்து வருவதுடன், மார்கெட் வீதியில் காய்கறி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் தவிக்கின்றனர். தினசரி வியாபாரிகளிடம் பேரூராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அக்கறை காட்டுவதில்லை.






      Dinamalar
      Follow us