/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சொல்கிறார் தினகரன்
/
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சொல்கிறார் தினகரன்
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சொல்கிறார் தினகரன்
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சொல்கிறார் தினகரன்
ADDED : செப் 16, 2024 01:48 AM
காரைக்குடி: ''தி.மு.க., ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே இயங்குகிறது. அதனால் தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மது ஒழிப்பு கொள்கையில் திருமாவளவன் தீவிரமாக தான் உள்ளார். ஆனால் சமீப காலமாக அவர் குழப்பத்தில் இருக்கிறார். அதனால் தான் டுவிட்டர் பதிவை எனது அட்மின் போட்டுள்ளார் என்றார்.
கொரோனா காலத்தில் மது இன்றி, உடல் நலம் பாதிக்காமல் இருந்துள்ளனர். படிப்படியாக மது ஒழிப்பு என்பது சாத்தியம் தான். 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அமெரிக்கா சென்று வந்த முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த தகவலும் இல்லை.
ஸ்டாலின் வெளிநாடு சென்று திரும்பியது, எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்று வருகிறார் என்று சொல்லும் கதை தான்.
பழனிசாமி தலைமையில் நடந்த ஆட்சி தான் தமிழகத்தில் மோசமாக இருந்தது. ஆனால் பழனிசாமி 4 ஆண்டு ஆட்சியை விட தி.மு.க., ஆட்சி தான் மிகமோசமாக உள்ளது.
தி.மு.க., ஆட்சி விளம்பரத்தால் மட்டுமே இயங்குகிறது. அதனால் தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் வலுவான கூட்டணி, பணத்தை பயன்படுத்தி தான் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க.,வின் 'பி' டீமாக தான் பழனிசாமி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.,விற்கு பழனிசாமி முடிவு கட்டி விடுவார். பிரபலமடையும் நோக்கில் தான் சீமான் எதிர்மறையான கருத்துக்களை பேசுகிறார் என்றார்.

