sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்காமல் இழுபறி

/

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்காமல் இழுபறி

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்காமல் இழுபறி

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு சம்பளம் வழங்காமல் இழுபறி


ADDED : ஏப் 29, 2024 11:54 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பதிவுக்கான 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு' சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு தகுதி அடிப்படையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியது. இதற்காக மாவட்ட வாரியாக விண்ணப்ப மனு, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றில் உள்ள விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, அரசுக்கு அனுப்ப அந்தந்த மாவட்டத்தில் தாலுகா வாரியாக டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.8000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2023 அக்டோபர் முதல் 2024 மார்ச் வரை மகளிர் உரிமைத்தொகை மனுக்கள், ஆதார், ரேஷன் கார்டுகளை 'ஸ்கேனிங்' செய்து இணையதளம் மூலம் அரசுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தாலுகாவிலும் 25 முதல் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அரசுக்கு அனுப்பியுள்ளனர். 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' மகளிர் திட்டம் மூலம் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 5 மாதங்களாக இப்பணியை முடித்து கொடுத்தவர்களுக்கு, மாதம் ரூ.8000 சம்பளம் வீதம் தலா ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரம் சம்பள பணத்தை மாவட்ட நிர்வாகம் இது வரை வழங்கவில்லை என கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் பாதிக்கப்பட்ட 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா கூறியதாவது: ஏற்கனவே 'ஸ்கேனிங்' பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு சம்பளம் வழங்கி விட்டோம். 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு' சம்பளம் கிடைக்காதது குறித்து விசாரிக்கப்படும்.






      Dinamalar
      Follow us