ADDED : மே 04, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற அமைப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவாஜிகணேசன் தலைமையேற்றார். பிரசாரத்தை ஏ.ஐ.டி.யூ.சி., மாநிலத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகரச் செயலாளர் ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் குமரேசன் மற்றும் தேவி, லில்லி புஷ்பம், சரவணன் கலந்து கொண்டனர்.