ADDED : மார் 08, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 11ம் தேதி காலை 11:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரை மானாமதுரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மானாமதுரை பகிர்மான செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.