sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீராத போக்குவரத்து நெரிசல்; தவித்த பொது மக்கள்

/

தீராத போக்குவரத்து நெரிசல்; தவித்த பொது மக்கள்

தீராத போக்குவரத்து நெரிசல்; தவித்த பொது மக்கள்

தீராத போக்குவரத்து நெரிசல்; தவித்த பொது மக்கள்


ADDED : மே 19, 2024 10:10 PM

Google News

ADDED : மே 19, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தவிப்பிற்குள்ளாகினர்.

திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்களது விவசாயம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல திருப்புவனம் வந்து செல்கின்றனர். இதுதவிர முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஷ்வரரை வழிபடவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று வைகாசி முகூர்த்த நாள் என்பதால் கடை வீதியில் தேங்காய், பழம், பூக்கள் வாங்கவும் திருப்புவனம் வழியாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லவும் ஏராளமானோர் வருகை தந்தனர். போக்குவரத்து போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்புவனம் கோட்டையில் இருந்து புதுார் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.

இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு திருவிழா எனக் கூறி போலீசார் அங்கு அனுப்பப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசாரே இல்லை. முகூர்த்த நாள் என்பதால் மணமக்கள் பலரும் குறிப்பிட்ட நேரத்திற்கு கோயிலுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us