sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விவசாயிகள் பதிவு நீட்டிப்பு

/

விவசாயிகள் பதிவு நீட்டிப்பு

விவசாயிகள் பதிவு நீட்டிப்பு

விவசாயிகள் பதிவு நீட்டிப்பு


ADDED : பிப் 22, 2025 06:28 AM

Google News

ADDED : பிப் 22, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: விவசாயிகள் பதிவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசின் மானிய திட்டங்கள், பலன்களை விவசாயிகள் எளிதாக பெறுவதற்கும், வேளாண் சேவை பெறுவதற்காக விவசாயிகளுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதற்கான பதிவிற்கு விவசாயிகள் 10(1) நில ஆவணம், ஆதார் சரிபார்த்து ஊராட்சிகளில் பதிவு நடைபெற்று வருகிறது.

பதிவிற்கான கடைசி நாளாக பிப்.20 அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலோனோர் பதிவு செய்யவில்லை. பதிவுக்கு பயன்படுத்தப்படும் செயலி வேகமின்மை பதிவை தாமதப்படுத்தியது.

மேலும்பல விவசாயிகளின் நிலங்கள் முன்னோர்கள் பெயரில் இருப்பதாலும், கூட்டுப் பட்டாவாக இருப்பதாலும் பதிவு செய்ய முடியவில்லை. ஆதார்களில் தற்போதைய அலை பேசி பதிவு செய்யாததாலும் ஆதார் ஒருமுறை கடவுச் சொல் மூலம் சரிபார்த்து பதிவு செய்ய முடியவில்லை. இணையதள வேகமின்மையால் அரசின் நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும் பலர் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இதுவரை 35 சதவீத விவசாயிகளே திருப்புத்தூர் வட்டாரத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பதிவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us