ADDED : ஆக 05, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - தேவகோட்டை தாலுகாவில் ஆக., 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேவகோட்டை தாலுகாவில் இத்திட்ட முகாம் நடைபெறும். இதில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். அரசின் அனைத்து நலத்திட்டம், சேவைகள் மக்களுக்கு சென்று சேரும் நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக ஆக., 7 முதல் 9 வரை தேவகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பேரூராட்சி, வி.ஏ.ஓ., மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் மனுக்கள் வழங்கலாம். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். ஆக., 21 மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காணப்படும், என்றார்.