sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்

/

அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்

அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்

அதிகரிக்கும் வெப்பத்தால் இறக்கும் மீன்கள்


ADDED : ஏப் 25, 2024 06:14 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் தெப்பக்குளமான சீதளி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.

திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமான சீதளி குளத்தில் கடும் கோடை வெப்பத்திலும் ஓரளவு நீரே உள்ளது. சில படித்துறைகளில் மட்டும் மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொத்து, கொத்தாக மீன்கள் இறந்து கரையோரமாக ஒதுங்கி மிதக்கத் துவங்கியுள்ளன. வடகரை படித்துறையில் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் அதிகமான மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. இதனால் குளத்தில் நீர் சுகாதாரக்கேடாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தொடரும் வெப்பத்தால் மேலும் அடுத்தடுத்துமீன்கள் இறக்க வாய்ப்புள்ளது. நீர் குறைவதுடன், அதிகமான கோடை வெப்பத்தால் நீரில் ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்த மீன்களை அகற்றி குளத்து நீரை சுகாதாரம் காக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us