/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் வயல்களில் பரவிய காட்டுத்தீ
/
எஸ்.புதுார் வயல்களில் பரவிய காட்டுத்தீ
ADDED : மார் 31, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே வயல்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இக்கிராமத்தை ஒட்டியுள்ள தச்சன் கண்மாய் அருகே நேற்று வயல்வெளிகளில் தீ பற்றியது.அது செடி, புதர்கள் வழியாக பல்வேறு வயல்கள், தோப்புகளுக்கும் பரவியது. இதில் பல வகையான மரங்கள் எரிந்து சாம்பலானது.
சிங்கம்புணரி, பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் கிராம மக்களின் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

