sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

/

மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்


ADDED : ஆக 21, 2024 07:31 AM

Google News

ADDED : ஆக 21, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களால் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பானை, கூஜா சமையலுக்கு தேவையான பொருட்கள், சிலைகள், முளைப்பாரி ஓடு,கஞ்சி கலயங்கள், நவராத்திரியில் வைத்து வழிபடும் கொலு பொம்மைகள் தயாரித்து வருகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்திக்காக அரை அடியிலிருந்து 10 அடி வரையிலான களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

செப்.7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாகவே மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் ரூ. 10 முதல் ரூ. 300 வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று கோயில்கள் மற்றும் பொது இடங்கள்,தெருக்களில் வைத்து வழிபடக்கூடிய 3 அடியிலிருந்து 10அடி வரையிலான விநாயகர் சிலைகளும் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி பாண்டியராஜன் 40, கூறியதாவது: சிலைகள் களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், நீர் நிலையில் எளிதாக கரையும் வகையிலும் தயாரிக்கப்படுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து ஆர்டர் கொடுத்துள்ளனர்.

மேலும் ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., போன்ற அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக ஏராளமானோர் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us