sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

/

கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது


ADDED : ஆக 29, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: குன்றக்குடி அருகேயுள்ள பாதரக்குடி திட்டு மலைக்காளி கோயில் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கார் மற்றும் பைக்கில் நின்று கொண்டிருந்த சிலர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நின்ற பகுதி பாலத்தின் கீழே சென்று பார்த்த போது, 62 பண்டல்களில் 124 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஒரு கார், பைக் மற்றும் 5 அலைபேசி மற்றும் 124 கிலோ கஞ்சாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.

மேலும், இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருச்சி தில்லை நகர் ரகுமானியா புரத்தைச் சேர்ந்த குலாம் முகமது மகன் அப்துல் ரகுமான் 23 என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கடத்தலில் சம்பந்தப்பட்ட காரைக்குடி காளவாய்பொட்டல் முத்து இருளாண்டி மகன் திருப்பதி 23, அருணாச்சலம் மகன் மணிவாசகம் 21, சரவணன் மகன் விமல் ராஜ் 22 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us