ADDED : ஆக 05, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், டாஸ்மாக் மேலாளர் சிவக்குமார் பங்கேற்றனர். கூட்டத்தில் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, உதவித்தொகை, ரேஷன் கார்டு கேட்டு 375 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.62,890 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.