ADDED : செப் 07, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: தென்கரை மவுண்ட்சீயோன் சில்வர் ஜூபிளி சி.பி.எஸ்.சி.பள்ளியில்
வளரிளம்பருவ மாணவிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருமயம் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி
செஞ்சுருள்சங்கம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்க இயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி அறங்காவலர் விவியன் ரேச்சல் ஜெய்சன் தலைமை வகித்து துவக்கினார்.
செஞ்சுருள் சங்க தன்னார்வலர் மாணவி ஜாஸ்மின் வரவேற்றார்.
முதல்வர் அர்ஷியாபாத்திமா, செஞ்சுருள்சங்க திட்டஅலுவலர் லட்சுமண்குமார் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். மாணவி காயத்ரி நன்றி கூறினார்.