sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு சிறை

/

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு சிறை

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு சிறை

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு சிறை


ADDED : மார் 28, 2024 11:21 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார் கோவில் அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.

காளையார் கோவில் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி 70. இவர் 2018 அக்.18ம் தேதி சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத போது அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசி பாலியல் நோக்கத்துடன் அழைத்து சிறுமி, சிறுமி சகோதரரை தாக்கியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் காளையார் கோவில் போலீசில் புகார் அளித்துள்ளனர். காளையார் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி சிறுமியின் பெற்றோர் 2018 நவ.3 அன்று சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி சரத்ராஜ் விசாரித்தார்.

முதியவர் அழகர்சாமிக்கு சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி இரவு நேரத்தில் நுழைந்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும், அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசிய குற்றத்திற்காக 3 மாத சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் 2 வார சிறை தண்டனையும்.

சிறுமியின் அடக்கத்தை சீர்குலைக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனையும், மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும், குழந்தைகள் பாலியல் பாதுகாப்புச் சட்ட பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.

இந்த தண்டனை அனைத்தையும் முதியவர் அழகர்சாமியை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us