sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விடுதி காவலருக்கு 5 ஆண்டு சிறை

/

விடுதி காவலருக்கு 5 ஆண்டு சிறை

விடுதி காவலருக்கு 5 ஆண்டு சிறை

விடுதி காவலருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : ஜூன் 20, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தங்கி 5ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காவலருக்கு 5 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மானாமதுரை அருகே கேப்பனுாரை சேர்ந்தவர் பொருட்செல்வம் 57. இவர் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் காவலராக பணிபுரிந்தார். அதே விடுதியில் தங்கி படித்த 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். விடுதியின் வார்டன் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் 2017 மார்ச் 12ம் தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொருட்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த போக்சோ பொறுப்பு நீதிபதி கோகுல்முருகன், குற்றவாளி பொருட்செல்வத்திற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.1000 அபராதம் அளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us