sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீண்டும் பணி கேட்டு கலெக்டரிடம் மனு

/

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீண்டும் பணி கேட்டு கலெக்டரிடம் மனு

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீண்டும் பணி கேட்டு கலெக்டரிடம் மனு

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீண்டும் பணி கேட்டு கலெக்டரிடம் மனு


ADDED : ஜூலை 01, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை மீண்டும் பணியமர்த்த கோரி பெண்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.

கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 3 ஆண்டிற்கு முன் பள்ளி குழந்தைகள், வாசிப்பு திறனை மறவாமல் இருக்க, இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தில் மாணவர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் மையத்தை ஏற்படுத்தி, அங்கு மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை கற்பித்து வந்தனர். இதற்காக தன்னார்வலர்கள் மாதம் ரூ.1000 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 3700 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மையத்திற்கு தலா 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கென இரண்டு தன்னார்வலர்கள் கற்பித்தனர்.

கடந்த 3 மாதத்திற்கு முன் பின்தங்கிய ஒன்றியம் மற்றும் பள்ளி செல்லா, குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மட்டுமே இம்மையம் செயல்படும் என அரசு அறிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதுார், மானாமதுரை ஆகிய இரு ஒன்றியத்தில் ஒட்டு மொத்தமாக 1000 மையமாக சுருக்கிவிட்டனர். மற்ற மையங்களில் பணிபுரிந்த தன்னார்வலர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பள பாக்கியை வழங்காமல், பணியில் இருந்துவிடுவித்து விட்டனர்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள்நேற்று மீண்டும் தங்களுக்குபணி வழங்க கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us