sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 

/

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு ஜூலை 15 கடைசி நாள் 


ADDED : ஜூலை 01, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், நகர் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய சுகாதார ஊழியர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவ மனை ஊழியர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒலிப்பதிவாளர், நுண்கதிர் வீச்சாளர், புள்ளிவிபர குறிப்பாளர், மருத்துவமனை ஊழியர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் இன்று முதல் ஜூலை 15 மாலை 5:00 மணி வரவேற்கப்படுகிறது.

பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. விண்ணப்பத்தை http:/sivaganga.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர மாவட்ட சுகாதார அலுவலகம், மருத்துவ இணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவண நகலுடன் மாவட்ட சுகாதார அலுவலகம், இணை இயக்குனர் (மருத்துவம்) அலுவலகத்தில் ஜூலை 15 மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us