/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறப்பு விழாவிற்கு கீழடி பஸ் ஸ்டாப் தயார்
/
திறப்பு விழாவிற்கு கீழடி பஸ் ஸ்டாப் தயார்
ADDED : மார் 28, 2024 11:20 PM

கீழடி : கீழடி விலக்கில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செட்டிநாட்டு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்தும் பண்டைய தமிழர் நாகரீகம் பற்றி கண்டறிய பலரும் வந்து செல்கின்றனர்.
மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கில் இறங்கி இரண்டு கி.மீ., நடந்து சென்று அருங்காட்சியகத்தை காண வேண்டும், மீண்டும் பஸ் ஏற கீழடி விலக்கு வர வேண்டும், சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மழையிலும் வெயிலிலும் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
எம்.எல்.ஏ., தமிழரசியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்ச ரூபாய் செலவில் கீழடி அகழாய்வை பிரதிபலிக்கும் வண்ணம் செட்டி நாட்டு கட்டட கலை பாணியில் பஸ் ஸ்டாப் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப்பினுள் சுடுமண் பானைகளும், உறைகிணறுகளும் புடைப்பு சிற்பமாக வரையப்பட்டுள்ளது. பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. விரைவில் பஸ் ஸ்டாப் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

