sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

/

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 07, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று யாக சாலை பூஜை துவக்கம்

திருக்கோஷ்டியூர், ஜூன் 7--

திருப்புத்துார் அருகேயுள்ள பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சமீபவல்லி அம்பாள் கோயிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் கி.பி.13 ம் நுாற்றாண்டில் சோனாடு சுந்தரபாண்டிய மன்னரால் எழுப்பப்பெற்றது. இறைவனாக சுகந்தவனேஸ்வரர், இறைவியாக சமீபவல்லி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். பரிவார தெய்வங்களில் வயிரவசுவாமி, ஒற்றைச் சனீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் அனைத்து சன்னதிகளும், கோபுர, விமானங்களும் திருப்பணி நடந்து தற்போது ஜூன் 9ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை இன்று காலை 8:30 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.

தொடர்ந்து கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 5:00 மணிக்கு யாகசாலையில் கலசங்கள் நிறுவப்பெற்று முதல்கால யாகசாலை பூஜை நடைபெறும்.

நாளை காலை 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடைபெறும். ஜூன் 9 ல் காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை துவங்குகிறது.

தொடர்ந்து கோ பூஜை,லட்சுமி பூஜை நடந்து பூர்ணாகுதிக்கு பின் கலசங்கள் புறப்பாடாகி கோபுர, விமானங்களுக்கு காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

பின்னர் மகா அபிஷேகம் நடைபெறும். இரவில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.






      Dinamalar
      Follow us