ADDED : செப் 10, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக எழுத்தறிவு தின கருத்தரங்கு நடந்தது.
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.பேராசிரியர் ராஜமாணிக்கம் உறுதி மொழி வாசித்தார். காளீஸ்வரன் கருத்தரங்கை நடத்தினார்.கூடுதல் தலைமை செயலாளர் (ஓய்வு) குத்சியா காந்தி சிறப்பு வகித்தார். கிருஷ்ணவேணி வரவேற்றார்.
மாநில செயற்குழு ஜீவானந்தம், பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நல்லாசிரியர் மோகனசுந்தரம், மாநில செயற்குழு ராதா முருகேசன், ராஜேந்திரன்,முன்னாள் மாநில பொது செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், மெய்யப்பன், ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணிக்கவள்ளி நன்றி கூறினார்.