ADDED : பிப் 24, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனத்தில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் தேரடி வீதியில் பெட்டி கடைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் கேரளா லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாண்டியன் 50, லாடனேந்தலைச் சேர்ந்த குருசாமி 62, ஆகிய இருவரையும் கைது செய்து, 60 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

