sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி

/

மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி

மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி

மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி


ADDED : ஜூன் 23, 2024 03:57 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மானாமதுரையில் தாமதமாக புறப்படுவதால் அரசு ஊழியர்கள், மாணவர்கள்,பயணிகள் சிரமப்படுகின்றனர்.

மதுரையிலிருந்து தினமும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பயணிகள் ரயில் தற்போது பாம்பன் பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் ராமநாதபுரம் வரை செல்கிறது.

இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு 7:50 மணிக்கு மானாமதுரை வந்து 8:00 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் செல்லும். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தினமும் மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் மானாமதுரைக்கு காலை 8:00 மணியிலிருந்து 8:15 மணிக்கு தான் வருகிறது.

மானாமதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்புவதற்கு காலை 8:30 மணிக்கும் மேல் ஆவதால் ராமநாதபுரம் செல்வதற்கு தாமதம்ஏற்படுகிறது. பரமக்குடி,சத்திரக்குடி,ராமநாதபுரம், மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ரயில் பயணி டேவிட் 39,கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக இந்த ரயில் மானாமதுரையில் இருந்து கிளம்புவதற்கு சுமார் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் தாமதம் ஆவதால் ராமநாதபுரம் செல்வதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிறது. உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்,மாணவர்கள அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே ரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் ரயிலை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us