/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தொடர் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகளால் மகிழ்ச்சி
/
மானாமதுரையில் தொடர் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகளால் மகிழ்ச்சி
மானாமதுரையில் தொடர் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகளால் மகிழ்ச்சி
மானாமதுரையில் தொடர் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகளால் மகிழ்ச்சி
ADDED : ஆக 12, 2024 03:35 AM

மானாமதுரை, : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நான்கு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் நீர்நிலைகள் நிரம்பி வருவதினால் விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை பகுதியில் கடந்த வாரம் வரை கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவாக மானாமதுரையில் மழையளவு பதிவாகி வருகிறது.நேற்று முன்தினம் இரவு மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.தெருக்களிலும்,ரோடுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிற்கூடங்களை மழை நீர் சூழ்ந்து கொண்டதால் தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள்,குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றில் நீர் நிரம்பி வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர்.
நேற்று காலை 6:00 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவாக திருப்புவனத்தில் 90.40 மி.மீ, மானாமதுரையில் 57, சிவகங்கையில் 32.00, திருப்புத்தூரில் 29.40, தேவகோட்டையில் 2.40, சிங்கம்புணரியில் 13.60 மழை பெய்துள்ளது.

