ADDED : மார் 06, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: அரளிப்பாறை மஞ்சுவிரட்டு மார்ச் 12ஆம் தேதி நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டுகளில் ஒன்றான அரளிப்பாறை மஞ்சுவிரட்டு ஐந்து நிலை நாட்டார்களால் மார்ச் 12ஆம் தேதி நடத்தப்படுகிறது. முல்லை மங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சீர்சேந்தமங்கலம், வேழமங்கலம் என ஐந்து எல்லை மங்கலப் பகுதிகளாக வாழும் இம்மக்கள் தமிழர்களின் வீரம், கலாசாரத்தை பறைசாற்றும் விதமாகவும், தங்கள் உறவினர்களை ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பரஸ்பரம் உறவு பாராட்டிக் கொள்ளும் விதமாகவும் இம் மஞ்சுவிரட்டை நடத்துகின்றனர்.
அரசின் வழிகாட்டுதல் படி வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மஞ்சுவிரட்டு நடத்த விழா கமிட்டியினரும், வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.