sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்

/

மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்

மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்

மொகரம் தீ மிதி திருவிழா இந்தாண்டும் நிறுத்தம்


ADDED : ஜூலை 17, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழையனுார் : பழையனுார் அருகே முதுவன்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த பாரம்பரியம் மிக்க மொகரம் திருவிழா அன்று இந்துக்கள் நடத்தும் தீ மிதி திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதுவன்திடலில் முளைப்பாரி திண்ணைக்கு எதிராக பாத்திமா பள்ளிவாசல் உள்ளது. முதுவன்திடலில் வசித்து வந்த இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகை உள்ளிட்டவை நடத்துவது வழக்கம், காலப்போக்கில் இஸ்லாமியர்கள் திருப்புவனம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டனர்.

ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் ஒரு வாரம் காப்பு கட்டி விரதமிருந்து அதிகாலை மூன்று மணியளவில் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம், முதுவன்திடலில் உள்ளாட்சி தேர்தலில் இருந்து கிராமமக்கள் இருதரப்பாக செயல்படுவதுடன் மோதலும் ஏற்பட்டு வருகிறது.

கடந்தாண்டு திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு முடிவு எட்டப்படாததால் ரத்து செய்யப்பட்டது.

இந்தாண்டும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித முடிவும் எட்டப்படாததால், இரண்டாவது ஆண்டாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us