ADDED : மே 31, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி கார்த்திகா 38. இவரது தங்கையின் கணவருக்கு சொந்தமான ஆட்டோவை, கார்த்திகாவின் கணவர் மகாலிங்கம் 39, நாள் வாடகைக்கு ஓட்டி வந்தார்.
கடந்த மே 13ம் தேதி மகாலிங்கம், சவாரி செல்வதாக கூறி ஆட்டோவை எடுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் மகாலிங்கத்தின் மனைவி கார்த்திகா காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.