/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நகராட்சியுடன் கல்குறிச்சியை இணைக்க எதிர்ப்பு
/
மானாமதுரை நகராட்சியுடன் கல்குறிச்சியை இணைக்க எதிர்ப்பு
மானாமதுரை நகராட்சியுடன் கல்குறிச்சியை இணைக்க எதிர்ப்பு
மானாமதுரை நகராட்சியுடன் கல்குறிச்சியை இணைக்க எதிர்ப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:46 PM
சிவகங்கை : மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆலங்குளம்,தயாநகர் உள்ளிட்ட கிராமங்களை நகராட்சியுடன்இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர்நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
மானாமதுரை பேரூராட்சியை தரம் உயர்த்தி, நகராட்சியாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சியின் மக்கள்தொகை 2021 கணக்கெடுப்பு படி 50,500 ஆக உள்ளது. இங்கு 20 ஆயிரத்து 406 வீடுகளில் இவர்கள் குடியிருந்து வருகின்றனர். கொச்சி - ராமேஸ்வரம், தஞ்சாவூர் - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் முக்கிய நகராக உள்ளது.
இந்நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இந்நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இந்நிலையில் மானாமதுரைக்கு அருகில் உள்ள கல்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களையும் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கல்குறிச்சி மக்கள் எதிர்ப்பு: மானாமதுரை நகராட்சியுடன் கல்குறிச்சி ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கே.ஆலங்குளம், தயா நகர், தயாபுரம், கங்கை நகர், கலைக்கூத்து நகர் போன்ற கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை நகருக்குமிக அருகில் உள்ள இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தீத்தான்குளம், எம்.ஜி.ஆர்., நகர், கால்நடை மருத்துவமனை, ராஜேந்திரன் நகர், வைகை குடியிருப்பு போன்ற பகுதிகளை இணைக்கலாம் என தெரிவித்து நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.