/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் பங்குனி உத்திரம்
/
குன்றக்குடியில் பங்குனி உத்திரம்
ADDED : மார் 25, 2024 06:52 AM

காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தி பறவைகாவடி எடுத்து வந்தனர். சண்முகநாதப் பெருமானுக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல், காய்கறிகளை சுவாமிக்கு காணிக்கையாகவும் செலுத்தினர். தொடர்ந்து தீர்த்தவாரி உற்ஸவமும், மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

