sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

/

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை

தீர்த்த கலயங்களை சுமந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரை


ADDED : ஜூலை 19, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு தீர்த்த கலயங்களை பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக சுமந்து சென்றனர்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து குருஜி பிண்டு மண்டூல் தலைமையிலான 32 பேர் கடந்த 15 ம் தேதி ரயிலில் புறப்பட்டு விஜயவாடா வந்து அங்கிருந்து மதுரை வந்தடைந்தனர். நேற்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு பாதயாத்திரையாக மதுரை வைகை ஆற்றில் தீர்த்தங்களை எடுத்து தோளில் சுமந்து கொண்டு மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்றனர்.

பிண்டு மண்டூல் கூறியதாவது: தமிழகத்தின் கோயில் நகரமாக விளங்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பிறகு புண்ணிய தீர்த்தமான வைகை ஆற்றில் தீர்த்தத்தை எடுத்து தோளில் சுமந்து பாதயாத்திரையாக மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபட்ட அங்கிருந்து தனுஷ்கோடி, கன்னியாகுமரி சென்று கடலில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூன கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகா காலேஸ்வர கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், முக்கிய நதிகள் மற்றும் கடலில் எடுக்கப்படும் தீர்த்தங்களை கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு அந்த தீர்த்தங்களோடு சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us