ADDED : ஆக 19, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே செய்களத்துார் பாண்டி மகன் சசிவர்ணம் 42. இவர் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்தார்.
நேற்று பணியில் இருந்த இவர், மதியம் 3:00 மணிக்கு சாப்பிடுவதற்காக ராஜகம்பீரத்தில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று ள்ளார். கால்பிரவு விலக்கு ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம், இவரது டூவீலரில் மோதியது. இதில், தலையில் அடிபட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சசிவர்ணத்திற்கு மனைவி, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

