/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள்; கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
/
மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள்; கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள்; கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள்; கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 02, 2024 05:36 AM

கீழடி: கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18 தொடங்கியது. தொல்லியல் துறை இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவஹர், கார்த்திக், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு மூன்றரை அடி ஆழம் வரை பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ன. இந்நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு ஓட்டில் மீன் உருவம் கோட்டு சித்திரமாகவும் , மற்றொரு ஓட்டில் செதில்கள், கழுத்து வளையம் உள்ளிட்டவைகளும் வரையப்பட்டுள்ளன. 6ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடும், 7ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறை கிணறும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூடுதல் குழிகளில் அகழாய்வு நடந்தால் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.