/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு
/
காரைக்குடியில் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு
காரைக்குடியில் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு
காரைக்குடியில் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு
ADDED : மார் 01, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி பர்மா காலனி சக்தி வீரமா காளியம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா பிப். 18 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து மது முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, அரிவாள் ஏணியில் பூஜாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.